முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்பது என்ன?
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு பிறகு கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்களும், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்களும், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்களும், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்களும் என மொத்தம் 1,545 பள்ளிகளில் 1,14,095 மாணவர்கள் காலை உணவுத்திட்டத்தில் பயன்பெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு தொடர் விடுமுறை; சாரை சாரையாக வந்த மக்கள்; களைகட்டிய சுற்றுலாத்தலங்கள்!