School Holiday: விடாமல் போட்டு தாக்கும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டம் தெரியுமா?

Published : Jul 26, 2024, 08:06 AM ISTUpdated : Jul 26, 2024, 08:07 AM IST

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
13
School Holiday: விடாமல் போட்டு தாக்கும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டம் தெரியுமா?
Tamilnadu Heavy Rain Alert

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.  நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது. 

23
Nilgiris Heavy Rain

அதன்படி நீலகிரி மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை.. இதோ பெரிய லிஸ்ட்!

33
Schools Holiday

இந்நிலையில் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மற்றும் குந்தா ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories