கோவிலில் இருந்து மாலையுடன் வந்த புதுமண தம்பதியை எலுமிச்சை பழம் கொண்டு திருஷ்டி சுற்றிய திருநங்கைகள் ரூ.1000 கேட்டுள்ளனர். அவர்கள் கொடுக்காததால் எந்த தம்பதியை திருநங்கைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசாரைக்கூட அவர்கள் பொருள்படுத்தாமல் தம்பதியை தாக்கியுள்ளனர். மேலும் போலீசாரையும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், கோயிலுக்கு வருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.