இந்த ரயில் திருவெறும்பூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். முன்னதாக, இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என மதிமுக எம்.பி துரை வைகோ ரயில்வே துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து துரை வைகோ ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ளார்.