குளிருக்கு பிரேக்.. உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! ரவுண்ட் கட்டி அடிச்சு ஊத்தப்போகும் மழை!

Published : Jan 06, 2026, 10:13 AM IST

Tamilnadu Rain: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

PREV
15
வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகளின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது. இதனையடுத்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாமல் ஏமாற்றியது. பின்னர் தமிழகத்தில் கடும் குளிர் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக அதிகாலை நேரத்தில் நடுங்க வைத்தது குளிர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

25
காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் பூமத்திய ரேகையை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 9ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

35
மிதமான மழை பெய்யக்கூடும்

இதனிடையே இன்று மற்றும் நாளை வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிசம்பர் 8ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

45
டெல்டா மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

மேலும் டிசம்பர் 9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

55
சென்னை வானிலை நிலவரம்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஓட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories