நெல்லை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் வசதிக்காக இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இதன் மூலம் பயணிகள் சில்லறைப் பிரச்சினையின்றி, விரைவாகவும் பாதுகாப்பாகவும் டிக்கெட் பெற முடியும். நடத்துனர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.