அரசியல் நிரந்தர நண்பரும் இல்ல, எதிரியும் இல்லை என்பார்கள். அதற்கு ஏற்றார் போல தர்மயுத்தம் நடத்தியதே பாஜக சொல்லி தான் நடத்தியதாக ஓபிஎஸ் கூறியது மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு அளிக்கக் கோரி ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில், கடைசி வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பாஜக தரப்பில் தனக்கான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று ஓபிஎஸ் உணர்ந்தார்.