வெள்ளப் பகுதியில் உதயநிதி
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பையும் ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், அந்தப்பகுதிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தாரிடம் அங்குள்ள நிலை குறித்து கேட்டறிந்த்தோடு,
வெள்ளம் காரணமாக சிகிச்சை தடைபடாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவமனை பணியாளர்களிடம் வலியுறுத்தினார். மேலும், நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிற போதும், சிகிச்சை முடிந்து திரும்புகிற போதும் அவர்கள் வெள்ள நீரில் சிக்காமல் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் படகினை வைத்திருக்கும்படி அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.