விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பது காவிரி ஆறாகும், கர்நாடகாவில் இருந்து பாய்ந்து வரும் நீரை தேக்கி வைத்து பாதுகாக்கும் அரணாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பாசனம் பெற்று வருகிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணை எப்போது திறக்கப்போகிறது என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. முதலமச்சர் ஸ்டாலின் இன்று பருவமழை ஆய்வு கூட்டத்தை நடத்தியுள்ள நிலையில், மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக முக்கிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.