Weather Alert : தமிழகத்தில் முடிந்தது மழை.. இரவு நேரத்தில் உறை பனி..! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

Published : Jan 17, 2024, 02:07 PM IST

மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் நீலகிரியில் உறைபனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

PREV
14
Weather Alert : தமிழகத்தில் முடிந்தது மழை.. இரவு நேரத்தில் உறை பனி..! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

அதிகாலையில் பனிமூட்டம்

தமிழகத்தில் மழை மற்றும் பனி நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (17.01.2024) தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

நாளை (18.01.2024) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

24

தமிழகத்தில் வறண்ட வானிலை

19.01.2024: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20.01.2024 முதல்  23.01.2024 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

34
rajasthan fog

உறைபனி எச்சரிக்கை:

17.01.2024 மற்றும் 18.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
 

44
fog

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின்  ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

பொங்கல் திருநாளில் இப்படி சம்பவத்தை கேட்டு ரொம்ப கஷ்டமா போச்சு.. முதல்வர் வேதனையோடு நிவாரணம் அறிவிப்பு.!

Read more Photos on
click me!

Recommended Stories