திமுகவில் இருந்து முக்கிய பெண் நிர்வாகி திடீர் விலகல்! அதிர்ச்சியில் ஸ்டாலின்! யார் இந்த மீனா ஜெயக்குமார்?

Published : May 23, 2026, 02:24 PM IST

DMK: திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், கட்சியில் நிலவும் சாதி அரசியல் மற்றும் அங்கீகாரம் மறுக்கப்பட்டதாகக் கூறி தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

PREV
15
மீனா ஜெயக்குமார்

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் செயல்பட்டு வந்தார். அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளர் லிஸ்டில் மீனா ஜெயக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கட்சித் தலைமையிடம் சீட் கேட்டிருந்தார். ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

25
லீமா ரோஸை சந்தித்த மீனா ஜெயக்குமார்

இந்நிலையில் அண்மையில் அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்எல்ஏவான லீமா ரோஸ் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இது தொடர்பான போட்டோஸ் வைரலான நிலையில் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதுதொடர்பாக மீனா ஜெயக்குமார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில்: நான் கொலை குற்றமா செய்தேன்? தீவிரவாதியை பார்த்து வந்தோமோ? இதற்கு இவ்வளவு எதிர்ப்பு? திமுக தோற்க காரணமே, சோசியல் மீடியாவில் இப்படி ஒவ்வொருவரை பற்றியும் கமெண்ட் போடுபவர்கள்தான். லீமா ரோஸ் என் கூட பிறந்த அக்கா மாதிரி. 20 ஆண்டு குடும்ப நண்பர். முதலில் நாங்கள் நண்பர்கள், அப்புறம்தான் கட்சிக்குள் வந்தோம். அவர் என்ன கெடுதல் செய்தார்? அவரது தொழிலை வைத்து விமர்சிப்பது முறையல்ல என காட்டமாக கூறியிருந்தார்.

35
சாதிக்கு மட்டும் தான் முக்கியத்துவம்

மேலும் நான் கட்சிக்காக ஓடி ஓடி உழைத்துள்ளேன். தலைவர் காலில் விழுந்து பதவி பெற முடியும். ஆனால் உழைப்பிற்கான அங்கீகாரம் தானாக வர வேண்டும். திமுக சாதி, மதம் பார்க்காத அனைவரையும் அரவணைத்து செல்லும் கட்சி. ஆனால் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதியை தவிர வேறு யாருக்கும் இடமே இருக்காது. ஒரு சாதிக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. நான் எந்த சாதிக்கும் எதிரானவள் இல்லை. நான் கட்சி மாறவில்லை. ஆனால் நீங்கள் பேசுவதை பார்க்கும்போது, கட்சி மாறலாம் என தோன்றுகிறது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீனா ஜெயக்குமார் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

45
மீனா ஜெயக்குமார் திமுகவில் இருந்து விலகல்

இதுதொடர்பாக மீனா ஜெயக்குமார் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வணக்கம். இன்று முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். மேலும் நான் இதுவரை பயணித்த இந்த அரசியல் பயணத்தில் என்னுடன் இணைந்து என்னை ஆதரித்து, ஊக்கப்படுத்தி, வழிநடத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

55
யார் இந்த மீனா ஜெயக்குமார்?

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனா ஜெயக்குமார். அப்பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். திமுக மகளிரணி துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். சட்டப்பேரவை தேர்தலில் அவருக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து மீண்டும் கட்சியில் இணைந்த அவருக்கு திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய போது மீனா ஜெயக்குமார் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories