TN CM Vijay | அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தி முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு வௌயிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உறுதிமொழி அளித்துள்ளது. இந்தத் திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றை முழு வீச்சில் நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகத்து வருகின்றனர்.
23
அகவிலைப்படி உயர்வு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த 01.01.2026 முதல் 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் அதனால் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனைக் கனிவுடன் பரிசீீலித்து 01.01.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.
33
16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..
இதனால் 58 சதவதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ.1230 கோடி கூடுதல் செலவினம் உருவாகும். அரசு அலுவலர்கள், ஆசிரயர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.