இந்நிலையில் இனி என் கணவர் உயிருடன் இருந்தால் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது. ஆகையால் கணவரை கொலை செய்துவிடுமாறு மனைவி கூறியுள்ளார். அதன்படி கார்த்திக், நண்பர்கள் 6 பேருடன் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு செந்தில்குமாரின் டீக்கடைக்கு வந்துள்ளனர். அப்போது மது அருந்தி விட்டு விடிய, விடிய காத்திருந்த கும்பல் செந்தில்குமாரை, பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளனர். காவியா, கள்ளக்காதலன் கார்த்திக் உட்பட 4 பேர் சிலைமான் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தாலி கட்டிய மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.