அரசு விடுமுறை தவிர்த்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள், கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அளித்து கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக சித்திரை மாதம் வந்துவிட்டால் பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களையொட்டி உள்ளூர் விடுமுறை வரிசைக்கட்டி வரும்.