சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 3ஆம் தேதி 210 சிறப்பு பேருந்துகளும், செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தலா 115 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பெங்களூரு, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மாதவரத்திலிருந்தும் கூடுதல் சேவை
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கும்பகோணம், திருச்சி, ஓசூர், வேலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 95 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.