இந்த ஆம்னி பேருந்தும், வேனும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் குழந்தை, வேன் ஓட்டுநர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் சிலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.