மகளிர் உரிமைத்தொகைக்கு குவியும் விண்ணப்பங்கள்: யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

Published : Mar 22, 2025, 12:19 PM IST

திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் விரிவடைந்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.13807 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தில் யாருக்கெல்லாம் உரிமைத் தொகை கிடைக்கும்?

PREV
13
மகளிர் உரிமைத்தொகைக்கு குவியும் விண்ணப்பங்கள்: யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

Kalaignar Women's Scheme: திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம் பெற்ற உறுதி மொழிகளில் ஒன்றான மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த திட்டம் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது தமிழக சட்டமன்றத்தில் கடந்த 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதிநிலை அறிக்கையில் ரூ.13 ஆயிரத்து 807 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
 

23
magalir urimai thogai

மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) பெறுவது எப்படி?

தமிழ்நாடு அரசு வழங்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டத்தின் கீழ், தகுதியான பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை பெறுவதற்கான நடைமுறைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

தகுதி விதிமுறைகள்:
 

குடும்ப தலைவி (மகளிர்) ஆக இருக்க வேண்டும்.

குடும்ப வருமானம் வருடத்திற்கு ₹2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

குடும்பத்தின் நில உரிமை வயல் மற்றும் வீட்டு மொத்த நிலம் குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நிரந்தர குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள், வரித்தொகை செலுத்துபவர்கள் மற்றும் உயர்ந்த வருமானம் உள்ளவர்கள் தகுதியற்றவர்கள்.

33

விண்ணப்பிக்கும் முறை:
1. நேரில் விண்ணப்பிக்க:

உங்கள் அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது ஈ-சேவை மையம் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம்.
தேவையான ஆவணங்களை (ஆதார், குடும்ப அட்டை, வருமானச் சான்று, வங்கி கணக்கு விவரம்) வழங்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

2. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:
தமிழ்நாடு அரசு இணையதளம் அல்லது E-Sevai மையத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
உங்கள் மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories