இதனையடுத்து, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலம் உள்பட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தினை ஒரு அமைச்சர் மற்றும் எம்.பி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து நேரில் சென்று முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.