20 கிலோ உற்பத்தி செய்த மல்லிகை தோட்டங்களில் தற்போது 200 கிராம் பூக்கள் மட்டுமே உற்பத்தி ஆகின்றன. இதனால் நிலக்கோட்டை மலர் சந்தைக்கு கொண்டு வரப்படும் மல்லிகை பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூபாய் 10 ஆயிரத்தை தாண்டியது. பூக்கள் கிடைக்காததால் ஏராளமான வெளிநாடு ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக பூ ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.