விஜய்க்கு தொடரும் சிக்கல்.. ஜனநாயகன் படக்குழு vs சென்சார் போர்டு.. உயர்நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்!

Published : Jan 20, 2026, 03:26 PM IST

தங்களது வாதங்களை முன்வைத்த பட தயாரிப்பு நிறுவனம், ''ஜனநாயகன் பட விவகாரத்தில் ஜனவரி 29ம் தேதிக்கு பிறகு அனைத்தும் மறுக்கப்பட்டது. சென்சார் போர்டிடம் வெளிப்படைத்தன்மை இல்லை'' என்று கூறியது.

PREV
14
ஜனநாயகன் வழக்கு

நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழங்காததால் பொங்கலுக்கு வெளியாகவில்லை. சென்சார்ட் சர்டிபிகேட் வழங்க உத்தரவிடக்கோரி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இதை விசாரித்த தனி நீதிபதி ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்து தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவரை ரத்து செய்து வழக்கை ஒத்திவைத்தது.

24
சென்சார் போர்டில் யார் படத்தை பார்த்தார்கள்?

இதற்கிடையே படக்குழு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜனநாயகன் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 அப்போது பட தயாரிப்பு நிறுவனமும், சென்சார் போர்டும் அனல்பறக்கும் வாதங்களை முன்வைத்தன. மணடல சென்சார் போர்டில் யார் படத்தை பார்த்தார்கள்? படத்தை பார்த்து ஆய்வு செய்ய சட்டப்படி யாருக்கு அதிகாரம் உள்ளது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

34
உடனே வெளியிட வேண்டும் என கூற முடியாது

இதற்கு பதில் அளித்த சென்சார் போர்டு, ''படத்தை பார்த்து ஆலோசனை சொல்லும் குழு தான் படத்தை பார்த்தது'' என்றது. மண்டல தணிக்கை வாரிய அதிகாரி படத்தை பார்த்தாரா? என நீதிபதி கேட்டபோது, ''அவர் படத்தை பார்க்கவில்லை. குழுவினர் தான் பார்த்தார்கள்'' என சென்சார் போர்டு பதில் அளித்தது.

 தொடர்ந்து தணிக்கை வாரியம், ''படத்தை மறு ஆய்வு செய்வது தொடர்பாக ஜனவரி 5ம் தேதியே படக்குழுவுக்கு தெரிவித்து விட்டோம். படத்தை உடனே வெளியிட வேண்டும் என கூற முடியாது. கால அவகாசம் வழங்க வேண்டும்'' என்று கூறப்பட்டது.

44
சென்சார் போர்டிடம் வெளிப்படைத்தன்மை இல்லை

இதனைத் தொடர்ந்து தங்களது வாதங்களை முன்வைத்த பட தயாரிப்பு நிறுவனம், ''ஜனநாயகன் பட விவகாரத்தில் ஜனவரி 29ம் தேதிக்கு பிறகு அனைத்தும் மறுக்கப்பட்டது. சென்சார் போர்டிடம் வெளிப்படைத்தன்மை இல்லை. தகவல் கிடைத்தவுடன் நீதிமன்றத்தை அணுகினோம். 

விதிகளை ஆய்வு செய்து தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். அவர் உத்தரவில் எந்த தவறும் இல்லை. விதிகளின்படி 2 நாளில் சென்சார் சர்டிபிகேட் வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும்''என்று தெரிவிக்கப்பட்டது.

பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிபதி கேள்வி

அப்போது பேசிய நீதிபதி, ''தணிக்கை வாரியத்துக்கு ஒரு மணி நேரமாவது அவகாசம் தரப்பட்டதா? சான்றிதழ் வழங்கும்படி தனி நீதிபதி எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? ஒருநாள் கூட அவகாசம் வழங்க வேண்டாமா? போதுமான கால அவகாசம் தணிக்கை வாரியத்துக்கு கொடுத்திருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories