இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுமித்ரா, புளியங்குளத்திலுள்ள வீட்டைக் காலி செய்துவிட்டு செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சுமித்ராவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சுமித்ரா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.