இதனால் மனமுடைந்த அபிசெல்வி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷப்பொடியை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலைக்கு சென்ற தாயார் வீடு திரும்பி வந்து பார்த்தபோது தனது மகள் தூக்கில் சடலமா தொங்கியதை பார்த்து அலறி கூச்சலிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அபிசெல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.