இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.