கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு, பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.