படிப்பதற்கு வசதி
அவர்களுக்கு, 2025-ஆம் ஆண்டு நடைபெற உள்ள, யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வுக்கு தயாராக ஏதுவாக, மாத மாதம், 7,500 ரூபாய் வழங்கும் திட்டத்தின் துவக்கமாக. 13 மாணவர்களுக்கு தலா ரூபாய் 7.500/-க்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் குடிமைப் பணித் தேர்வுக்கு பயிற்சி பெறும் பெரும்பாலான மாணவர்களுக்கு உதவிடும் வகையில் சுமார் 4000 சதுர அடி பரப்பில் 200 மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் நான் முதல்வன் யு.பி.எஸ்.சி 'Study hall' சென்னை அண்ணா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்களுக்கு மாதம் 2ஆயிரம் ரூபாய் முதல் 3ஆயிரம் ரூபாய் வரை செலவு குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாதம் 7500 ரூபாய் உதவித்தொகை திட்ட்த்தில் இந்தாண்டிற்கான மாணவர்களுக்கான தேர்வு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் அடுத்த பேட்ஜ்க்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது.