அதிக விலையில் மருந்துகள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த விலையில் கூட்டுறவு துறை சார்பாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்ததக்கட்டமாக அரசு மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளித்தாலும் ஒரு சில மருந்துகள் தனியார் மெடிக்கலில் வாங்கும் நிலை உள்ளது.
இதே போல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் மருந்துகள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பாக குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகம் அமைக்கப்படவுள்ளது.