இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி. முகம்மது நபிகள் அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மக்களிடம் அவருடைய எளிமையான போதனைகள் மூலம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுசேர்த்த பெருமைக்கு சொந்தக்காரர். இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளை நினைவு கூறும் நாளாக மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் பிறப்பும், இறப்பும் ஒரே நாள் என்பது குறிப்பிடத்தக்கது. முகம்மது நபி, கிபி 570ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாது நபியாக இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.