தமிழ்நாட்டில் நவம்பர் 26ம் தேதி முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக கடுமையான மழைப்பொழிவு விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரால் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.2000 வழங்கிட உத்தரவிடப்பட்டது.