பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கும் விடுமுறை! வெளியானது அறிவிப்பு! டாஸ்மாக் கடைகளுக்கு?

Published : Jan 21, 2025, 01:45 PM ISTUpdated : Jan 22, 2025, 02:39 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
14
பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கும் விடுமுறை! வெளியானது அறிவிப்பு! டாஸ்மாக் கடைகளுக்கு?
Erode East By Election

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி காலமானார். அவர் மறைவை அடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சட்டமன்ற தொகுதி காலியானால் 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

24
AIADMK

இந்த இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புறக்கணிப்பதாக அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தது. இதில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 46 பேர் போட்டியிடுகிறார்கள். 

இதையும் படிங்க: அனைத்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய சுற்றறிக்கை! பள்ளி கல்வித்துறை இயக்குநர் அதிரடி!

34
Tamilnadu Government

இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக உள்ளவர்கள், மாநிலத்தின் வேறு பகுதியில் பணி புரிந்தாலும் அவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  இனி காணும் பொங்கல் அரசு விடுமுறை ரத்து? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்! என்ன காரணம் தெரியுமா?

44
TASMAC

பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதியன்று நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து நீக்கம்! செந்தில் முருகன் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் இபிஎஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories