மேலும், சென்ற கூட்டத் தொடரின்போது எனது தொகுதி உட்பட நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைபடும் அரிய மண் தாதுக்கள் இறக்குமதி செய்து கொடுப்பதில் இருந்த தடைகள் குறித்து எனது கவனத்திற்கு வந்ததையடுத்து, நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்களின் உயர் செயலதிகரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்றேன். உடனடி கொள்கை மாற்றங்கள் செய்து கொடுத்த அதிகாரிகளுக்கும் அமைச்சரிடம் நன்றி தெரிவித்து கொண்டேன்.
திருச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகளை கவனமாக கேட்டுக் கொண்ட மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது திருச்சி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.