மாற்றுத்திறனாளிகளை விமர்சித்த துரைமுருகன்
இதனையடுத்து நேற்று முன்தினம் துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, இளையரசனேந்தலில் நடைபெற்ற தி.மு.க பொதுக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசினார். அதிமுக பாஜக கூட்டணியை விமர்சித்தார். அந்த வகையில் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.,வும் தான் கட்சிகள்.
மற்றவை எல்லாம் கட்சிகள் இல்லை. அதிமுகவும், பா.ஜகவும் வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரே அணியில் சேரும். நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக் கொண்டு, திமுக.வை எதிர்க்கப் பார்க்கின்றனர் என துரைமுருகன் பேசியிருந்தார்.