மலைப்பகுதியில் நிலச்சரிவு
இதனிடையே நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலை பகுதிகளில் மழை கொட்டி வருவதால் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், மற்றும் பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.