மேலும் எஸ்பி ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகளான காவல்துறை உளவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் செந்தில்வேல் மற்றும் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆஷிர்வாதம் ஆகியோர் ஊழலில் ஈடுபடுவதாகவும், தன்னை அவர்களுக்கு இணங்கும்படி அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
டிஎஸ்பி சுந்தரேசனின் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை உண்மைக்கு புறம்பானவை என்றும், அவரது வாகனம் முதலமைச்சர் ஸ்டாலின் வருகையின் போது தற்காலிகமாக விஐபி பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், மாற்று வாகனம் வழங்கப்பட்டதாகவும் கூறினார். இதனையடுத்து தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நடத்திய விசாரணையில், சுந்தரேசன் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறியதாகவும், அனுமதியின்றி ஊடகங்களில் பேட்டியளித்ததாகவும், உயர் அதிகாரிகள் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் கண்டறியப்பட்டது.