தமிழ்நாடு அரசுக்கு பிற வருவாய்களை காட்டிலும் அதிக வருவாய் ஈட்டி தருவது டாஸ்மாக்தான். பிற மாநிலங்களை பொறுத்தவரை மதுபானங்களை விற்பனை செய்வது தனியார் நிறுவனங்கள்தான். ஆனால், தமிழ்நாட்டில் அரசே எடுத்து நடத்தி வருகின்றனர். திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது.