இதனையடுத்து கைது செய்யப்பட்ட 28 பேர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் காவல் துறை முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லையென கோரி CBI விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கப்பட்டுள்ளது, மேலும் உயர்நீதிமன்றம் காவல்துறையிடமிருந்து பதில் கோரியுள்ளது.
இதனிடையே இன்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 மாத காலத்திற்குள் இடைக்கால குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் தெரிவித்துள்ளது.