இந்த சிறப்பு ரயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், காயம்குளம், கொல்லம், கொட்டாரக்கரை, புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மானாமதுரை, அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டிணம், திருத்துரைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேற்கண்ட சென்னை-வேளாங்கண்ணி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி மற்றும் திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஆகஸ்ட் 19) காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.