திருமழிசை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தை இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே திறக்க மாநில அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், வடபழனி - போரூர் இடையேயான மெட்ரோ இரயில் பணிகள் நிறைவடைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தத் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. குத்தம்பாக்கம் பேருந்து முனையம், பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து சுமார் 6.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கோயம்பேடு (CMBT) பேருந்து முனையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, வேலூர், கிருஷ்ணகிரி, வாலாஜா, ஓசூர், திருப்பத்தூர் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளை (TNSTC & SETC) இந்த புதிய குத்தம்பாக்கம் முனையத்திற்கு மாற்ற போக்குவரத்துத் துறையும் சிஎம்டிஏ-வும் (CMDA) திட்டமிட்டுள்ளன.
"வடபழனி - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட பின்னரே, குத்தம்பாக்கம் முனையத்தைத் திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், நாசரத்பேட்டை (பூந்தமல்லி) மெட்ரோ நிலையத்திற்கும் குத்தம்பாக்கம் பேருந்து முனையத்திற்கும் இடையே பயணிகளின் வசதிக்காக மாநகரப் பேருந்துகள் (MTC) இணைப்புச் சேவைகளாக இயக்கப்பட உள்ளன.
IRCTC Tour Package: பெங்களூர் டூ ராமேஸ்வரம், மதுரை! 5 நாள் டூர் வெறும் ₹10,710