குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்:16128) செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30, 2025 வரை (திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகள் தவிர) மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாகச் செல்லும்.
இந்த ரயில் மதுரை, சோழவந்தான்,கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் மற்றும் மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது. அதற்கு பதிலாக அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரி – ஹைதராபாத்
கன்னியாகுமரியில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் (வ.எண்: 07229) செப்டம்பர் 5, 12, 19, மற்றும் 26 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக செல்லும். மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நிற்காது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.