மேலும் திமுக, அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மொட்டை கிருஷ்ணன், சம்பவம் செந்தில் உள்ளிட்டோரையும் தேடி வருகின்றனர். இந்த விசாரணையின் படி காவல்துறையினரின் குற்றப்பத்திரிகையில், A1 ஆக ரவுடி நாகேந்திரனும், A2 ஆக தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், கடந்த விசாரணையில் காவல்துறையினரால் தயார் செய்யப்பட்ட 5000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.