மீண்டும் பள்ளிகள் திறப்பு.! மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பை போக்குவரத்து துறை

Published : May 28, 2025, 07:42 AM IST

பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியூர் சென்ற மாணவர்கள் திரும்புவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. 

PREV
16
கோடை விடுமுறை மாணவர்கள் கொண்டாட்டம்

பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண்டு இறுதி தேர்வு முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 

இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக மாணவர்கள் தங்களது உறவினர்கள் வீடுகளுக்கும் சுற்றுலாவிற்கும் சென்றுள்ளனர். இந்த நிலையில் விடுமுறை முடிந்து மாணவர்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு திரும்பும் வகையில் சிறப்பு பேருந்து தொடர்பான அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

26
மீண்டும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 30/05/2025(வெள்ளிக்கிழமை) 31/05/2025 (சனிக்கிழமை) மற்றும் 01/06/2025 (ஞாயிறுக்கிழமை) கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

36
சிறப்பு பேருந்து அறிவிப்பு

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 30/05/2025 (வெள்ளிக்கிழமை) அன்று அன்று 100 பேருந்துகளும் 31/05/2025 (சனிக்கிழமை) 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

46
தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30/05/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 570 பேருந்துகளும் 31/05/2025 (சனிக்கிழமை) அன்று 605 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 30/05/2025 அன்று 24 பேருந்துகளும் 31/05/2025 அன்று 24 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

56
26 ஆயிரம் பயணிகள் முன்பதிவு

மேலும் 01/06/2025 திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூர் மற்றும் பல்வேறு இடங்களுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8,119 பயணிகளும் சனிக்கிழமை அன்று 7,304 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 10,523 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

66
முன்பதிவு செய்து பயணிக்க கோரிக்கை

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories