இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் கூட்டணி குறித்து சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றவை மற்றும் சட்டத்திற்குப் புறம்பானவை.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை, டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்பின்படி, கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் எனக்கே (ராமதாஸ்) உள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த சட்டப்படி இடமில்லை
கடந்த 17.12.2025 அன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் நிறுவனத் தலைவரான நானே மீண்டும் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த முடிவை நீதிமன்றமும், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தச் சூழலில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரையோ அல்லது சின்னத்தையோ பயன்படுத்தி எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த சட்டப்படி இடமில்லை.