அன்புமணியை வளைத்துப்போட்ட இபிஎஸ்..! அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 30 தொகுதிகள்..?

Published : Jan 07, 2026, 09:11 AM ISTUpdated : Jan 07, 2026, 09:49 AM IST

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி இணைய சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இந்த இணைப்பு இன்றே நடைபெறப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

PREV
12
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் அன்புமணி

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் அரசியல் கட்சிகளின் பணிகள் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி இன்று இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த கூட்டணியில் பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

22
இரு பிரிவாக பாமக

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதல் காரணமாக தற்போது அக்கட்சி இரு தரப்பாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில் அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories