விடியல் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா.. இதையெல்லாம் ஏத்துக்கவே முடியாது.. அன்புமணி ஆத்திரம்

Published : Nov 05, 2025, 10:36 AM IST

ஓசூரில் விடியல் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம், பெண்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

PREV
14
அன்புமணி ஆத்திரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விடியல் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதியில் தங்கியுள்ள பெண்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

24
குளியல் அறையில் ரகசிய கேமரா

மேலும் அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள வன்னியபுரத்தில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விடியல் விடுதியின் எட்டாம் பிளாக்கில் உள்ள குளியல் அறைகளில் ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதில் பதிவான காட்சிகள் வெளியாள்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி அங்கு பணியாற்றும் பெண்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விடுதியில் தங்கியுள்ள பெண்களின் தனியுரிமையை பாதுகாக்க அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.

34
பெண்களின் பாதுகாப்பு பாதிப்பதை ஏற்க முடியாது

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து 20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் விடியல் விடுதியை கட்டிக் கொடுத்துள்ளன. அரசின் கட்டுப்பாட்டில் தான் இந்த விடுதி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதனால் இந்த விடுதி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு தங்கியுள்ளனர். ஆனால், அவர்களின் தனியுரிமை, கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடைபெற்றிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

44
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்..

பெண் தொழிலாளர் விடுதியின் குளியலறையில் காமிராக்களை பொருத்தியதால ஒரு பெண் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிந்து அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பெண் தொழிலாளர்கள் தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தால், அவற்றை முடக்க வேண்டும். விடியல் விடுதியில் தங்கியுள்ள பெண் தொழிலாளர்களின் தனியுரிமையை உறுதி செய்வதுடன், அவர்கள் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories