
'தென்னிந்தியாவில் காற்று மேலாண்மைக்கான நிர்வாகக் கட்டமைப்பு' என்ற தலைப்பில் சிஸ்டெப் வெளியிட்ட ஆய்வு, தமிழகம் உள்ளிட்ட ஐந்து தென்னிந்திய மாநிலங்களில் காற்று மாசுபாட்டின் தோற்றம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்த ஆய்வின்படி:
இதையும் படிங்க : Raja Maaligai Dhanayoga : 4 ராசிகளை திடீர் கோடீஸ்வரர் ஆக்கும் ராஜ மாளிகை தனயோகம்!
காற்று மாசுபாட்டைப் பொறுத்தவரை, தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் அதிகளவில் மாசுபாட்டை வெளியேற்றும் மாநிலங்களாக உள்ள நிலையில், கேரளா மற்றும் தெலங்கானா அதிகளவில் மாசுபாட்டைப் பெறும் மாநிலங்களாக உள்ளன. மத்திய பகுதியில் அமைந்துள்ள கர்நாடகா, மாசுபாட்டைப் பெறுவதிலும் வெளியேற்றுவதிலும் மிதமான பங்களிப்பைக் கொண்டுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தென்னிந்தியாவின் முக்கிய நகர்ப்புற பகுதிகளில் ஆண்டு சராசரி பிஎம்10 அளவு பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக உள்ளது. இதன் அடிப்படையில், தேசிய சுற்றுப்புற காற்றுத் தரநிலைகளை பூர்த்தி செய்யாத 25 தென்னிந்திய நகரங்கள் தரநிலையை எட்டாதவை என தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : Marriage Astrology : எந்த 2 ராசிகளுக்குள் கல்யாணம் பண்ணா விவாகரத்து வாய்ப்பு அதிகம்?
தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் வீட்டு பயன்பாடுகள், தொழிற்சாலைகள் மற்றும் திறந்தவெளி எரிப்பு ஆகியவை உள்ளூர் காற்று மாசுபாட்டின் முக்கிய ஆதாரங்களாக இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது. பிற பகுதிகளில் இருந்து வரும் பிஎம்2.5 மாசுபாட்டில் வீட்டு பயன்பாடுகள், எரிசக்தி மற்றும் தொழிற்துறை ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
டெல்லி மற்றும் இந்தோ-கங்கை சமவெளி பகுதிகளில் காற்று மாசுபாடு எப்படி எல்லைகளைத் தாண்டுகிறதோ, அதேபோல தென்னிந்தியாவிலும் காற்று மாசு எல்லைகளைக் கடந்து பயணிக்கிறது. இங்கு டெல்லியைப் போல குறிப்பிட்ட 'ஹாட்ஸ்பாட்' பகுதிகள் இல்லை என்றாலும், மாநிலங்களுக்கு இடையே காற்று மாசு பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருப்பது கவலைக்குரியதாக உள்ளது.
இதனைத் தடுக்கவே, டெல்லியில் இருப்பது போன்றே தென்னிந்தியாவிற்கும் ஒரு பிரத்யேகமான 'காற்று மேலாண்மை ஆணையம்' (CAQM) உருவாக்கப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிங்க : Washing Machine : துணி துவைக்கும்போது இந்த 7 தவறுகளை செய்றீங்களா? மெஷினும் துணியும் பாதிக்கலாம்!
இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டிய சில முக்கியப் பாதைகள்:
1. பொதுவான எரிபொருள் கொள்கை: அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான சுத்தமான எரிபொருள் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
2. மின்சார வாகனங்கள் : மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதிலும், பழைய வாகனங்களை அகற்றுவதிலும் ஒரே மாதிரியான இலக்குகள் இருக்க வேண்டும்.
3. கூட்டு முயற்சி: தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் மற்றும் மாநில காற்றுத் தர செயல் திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதியை இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தப் பயன்படுத்தலாம்.
காற்றுக்கு மாநில எல்லைகள் இல்லாத நிலையில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மாநில எல்லைகளைத் தாண்டிய ஒருங்கிணைப்புடன் இருக்க வேண்டும் என்பதையே இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க : குளத்தில் வாழ்ந்த இளைஞரின் வாழ்வையே மாற்றிய ஆனந்த் அம்பானி!