1990களில் சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த ரோஜா 1998ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிர கட்சி பணி ஆற்றினார். அதன் விளைவாக 2014ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். இறுதியாக கடந்த 2 ஆண்டுகள் அமைச்சரவையில் இடம் பெற்ற ரோஜாவுக்கு விளையாட்டு துறை மற்றும் சுற்றுசூழல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.