கரூரில் நடந்தது துரதிஷ்டவசமானது. அது நீண்ட நாட்களாக நடக்க காத்திருந்த ஒரு விபத்து. பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள், நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும். நானும் குற்றத்திற்கு பொறுப்பானவன் தான். என்னிடமும் தவறுகள் உள்ளன. நாம் அனைவரும் குடியுரிமை என்ன என்பதை பார்த்து அதை பின்பற்ற வேண்டும்.
என்னுடைய பூர்வீகம் அடிக்கடி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. நான் வேற்று மொழிக்காரன் என்று கூறுபவர்களே, ஒருநாள் என்னை தமிழன் என்று அழைப்பார்கள்.
சில சமூகங்கள் சுரண்டப்பட்டு, துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றன. அதுபோன்ற மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க, அரசியல் கட்சிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் உள்ளனர். உள்நோக்கங்களுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதாக, சில போலி சமூக ஆர்வலர்களும் உள்ளனர். அதுபோன்ற போலிகளால் மூளைச்சலவை ஆகாமல் இருக்க, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.