தமிழ்நாட்டில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளன. இந்த ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பண்டிகை நாள்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளையடித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுவும் பண்டிகை காலங்கள் வந்தால், அதற்கு ஆகும் செலவுகளை விட பொதுமக்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும் ஒன்று ஆம்னி பேருந்து கட்டணங்கள்.