விஷேச நாட்கள்- சிறப்பு ரயில்
ஆண்டு தோறும் லட்சக்கணக்கானவர்கள் படிப்பை முடித்து வேலை தேடி வருகிறார்கள். மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வெளியூருக்கு வேலை தேடி வருபவர்களுக்கு சென்னையானது இருக்க இடமும் கொடுத்து, பிழைக்க வழியும் தேடி கொடுக்கிறது. அந்த வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை விட்டு வந்தவர்கள் தொடர் விடுமுறை, விஷேச நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வார்கள்.
பொங்கல், தீபாவளி, புத்தாண்டு பண்டிகைக்கு உறவினர்களை பார்க்க பல லட்சம் பேர் சென்னையில் இருந்து மட்டுமே செல்வார்கள். இவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.