கூட்டுறவு சங்கத்தின் புதிய அறிவிப்பு
அதன் படி மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன், உரக்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மத்தியகால வேளாண் கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில், 18.36 இலட்சம் விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.15,500 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது சங்கங்களில் விவசாய உறுப்பினர்களாக உள்ள நபர்களின் சராசரி வயது 50 ஆக உள்ளது. எனவே, அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் புதிய வங்கியியல் திட்டங்களை வகுத்து. கூட்டுறவு கடன் நிறுவனங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி வங்கியினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசுத் திட்டங்கள் பொது மக்களை சென்றடையும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் வேண்டும்.