அதன்படி தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முதலில் ஜனவரி 14 செவ்வாய் கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வியாழன் கிழமை உழவர் திருநாள் என 3 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டது. இடையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்தால் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். ஆகையால் ஜனவரி 17ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தனர்.